அவசரத்தில் இருக்கும் இளம் பெண் ஸ்கூட்டியை விட்டு இறங்காமலேயே மாகாளியம்மனின் வாசலில் காலூன்றிப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு அவசரமுமின்றி ஆடி அசைந்து வெளிவரும் ஒரு மூதாட்டி தன் கைக்குழியை ஒற்றி எடுத்து பூசி விடுகிறாள் அவளுக்கு. பிசிறை கண் மறைத்து ஊதியும் விட்டாள் அந்த ஊதலில் வந்த இசை தூரத்தில் இருந்த ஒருவனுக்குத் தெளிவாகக் கேட்டது. யாரோ யாருக்கோ தீற்றி விடும் திருநீரில் யாரோ ஒருவனின் ஏதோ ஒன்று குணமடைகிறது தன் கை ஒன்றுமில்லாத இந்தக் காரியத்தைக் காணும் தேவியின் வதனத்தில் ஒரு பூரித்த புன்னகை. |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments