Skip to main content

கண் - கடைக்கண்



டவுள் மனிதனுக்கு 

முதலில் கண்களைப் படைத்தான் 

பிறக்கப் பிறக்கவே

அகலத் திறந்து கொண்டன கண்கள்.

மனிதன் மகிழ்ச்சியில் கூவினான்.

நன்றிப் பெருக்கால் மண்டியிட்டான்.

"கடவுளே!

நீர் எமக்கு கண்களை அருளியதன் வழியே

எம்மையும் உன்னைப் போல் ஒரு கடவுளாக்கினீர்!"

கடவுள் ஒரு சிரி சிரித்து விட்டு

பிறகு படைத்தான்

கடைக்கண்ணை.


*


விஷயம் 

மிக மிக எளிது

ஒரு மனிதன் 

இன்னொரு மனிதனை

ஓரக்கண்ணால் பார்க்காமல் இருந்து விட்டால் போதும்.


   

*


தம்பி!

இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்!

மேலும்

இரண்டு கண்களை வாடகைக்கு வாங்கி

எவ்வளவு முடியுமோ அவ்வளவு பார்த்து விடு!

பார்த்துப் பார்த்து பழசாக்கு!

பார்த்துப் பார்த்துப் பாழாக்கு!


*


காதலுக்குக் கண் இல்லை. 

ஆனால்

கடைக்கண் உண்டு.

காதலர் கடைக்கண்ணிலிருந்து

கண்களுக்குத் திரும்புவதுதான்

"காதலின் ஆவியாதல்" 

என்றழைக்கப்படுகிறது


*


கனக சுப்பு ரத்தினா!

காணாமல்

கண்டு கண்டு

கடுகை மலையாக்குவதில்

சமர்த்தன் உன் குமரன்.

அவனை நம்பி

நீ

"மாமலையைக்  கடுகாக்குவேன்" என்று

சைக்கிள்  செயினைச் சுற்றாதே!


 *


கூற்றம்  ! 

கூற்றம் ! 

கூற்றம் !

என்று அலறிக் கொண்டே இருக்கிறான் வள்ளுவன்.


கூற்றம் ! 

கூற்றம்!

கூற்றம்! 

என்ற படி

பார்த்துக் கொண்டே இருக்கிறான் வள்ளுவன்.


பார்வையைத் திருப்பிக் கொண்டால்

பாட்டிற்கு எங்கு போவான் பாவம்?


 *


"கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்; கண்ணே சகல நோய்க்கும் காரணம்" 

என்கிற தட்டையான வரியை 

கவிதை என்றான் சுகுமாரன்.

நான் இரண்டு கண்களாலும் வாசித்து

அவ்வரியை 

கவிதைப் புத்தகத்திலிருந்து வெட்டியெடுத்து

கண் மருத்துவமனையின்

"cash counter" க்குப் பக்கத்தில்  ஒட்டினேன். 

பிறகு 

ஓரக்கண்ணால் வாசித்துவிட்டு

ஆயிரம் கண் வைத்து அழுதேன்.


 *


"நீ விரும்பியது உன் உடல் முழுதும் ஆகுக!"

என்பதோடு கதை முடிந்து விட்டதா என்ன?

அதன் பின்

இந்திரன் அழுதான் என்பதற்கு 

ஆதாரம் உண்டா ஏதும்?


 *


குருடன் ஒருவன்

தடவித் தவறி

தவறித் தடவி

கைப்பற்றிவிட்டான் தடமுலையை.

விறைத்து நீண்ட காம்பை

நுனி நாவால் தீண்டுகையில்

அவன் குருடு நீங்கி ஒளி மின்னியது.

இதோ....

கண்ணுடைக் காதலன் எவனாலும்

காண முடியாக் காட்சி ஒன்று!


*


அருள் போலத் தோன்றுகிறது அந்தி

அதன் கையில்

எப்போதும் உண்டு

ஒரு களிம்புப் புட்டி.

எல்லா சிகிச்சைகளையும்

இடித்துத் தள்ளிக்கொண்டு 

பிறகு வருகிறான்

ஒரு மூர்க்கன்

எவ்வளவு மின்னினேனோ

அவ்வளவு அணைகிறேன்


*


மின்னுவதெல்லாம் பொன் அல்ல

மின்னுவதெல்லாம் பொன் அல்ல

மின்னுவதெல்லாம் பொன் அல்ல


*


நெற்றிக்குள் உள்ளொடுங்கி

இமைகளைப் போர்த்திக் கொண்டு

நடுங்கும் நாய்க்குட்டிகள் போல்

என்ன ஒரு நடிப்பு!

என்ன ஒரு நடிப்பு?


*


“முதலில் 

மெதுவாகக் கண்களை மூடுங்கள்!”

என்றார் குரு

ஒவ்வொரு கண்ணாய் 

மூடி முடிப்பதற்குள்

மணி ஒலித்து விட்டது


       

நன்றி; காலச்சுவடு நவம்பர்- இதழ்


Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம