Skip to main content

இட்ட அடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க

 



ட்ட அடி நோவ 

எடுத்த அடி கொப்பளிக்க


அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்


மண்ணூன்றி நின்றாலும்

தூசிகளால் அண்ட முடியாத

அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்


மேன்மைகளின் ஓயாத நச்சரிப்புகளிலிருந்து

மேன்மக்களை மீட்க வல்ல

அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.


சாம்ராட்களின் 

அவர்தம் குதிரைகளின்

மூச்சிளைப்புகளைக் குணமூட்ட வந்த

அதுதான்

விஞ்ஞானிகளை எலிக் கூண்டிலிருந்து

இழுத்து வந்தது


ஞானியரின் எல்லா யோகங்களையும்

சுருங்கச் சுருக்கி

ஒன்றே ஒன்றாய்

ஆக்கி அருளிய

அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்


மாட்டிற்குப் பதிலாய்

வண்டியிழுக்கும் ஒருவனை

வானத்தை நோக்கி விசிலூத வைத்தது 

எதுவோ

அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்


அது  

"வருகிறாயா?"  என்றது


எங்கே என்று

நான் எப்படிக் கேட்பேன்?


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...