Skip to main content

காதலில் தோல்வியுண்டோ கண்மணி?

 




காதலில் தோல்வி என்றானவுடன்

நேராக பெட்டிக் கடைக்குச் 

செல்கின்றனர் சிலர்


காதல் தோல்வி சிகரெட் 

என்றொன்றுண்டு.


என் பால்யத்தில்

சசியண்ணனை 

அந்த சிகரெட்டுடன் பார்த்திருக்கிறேன்


மாலை இருளுள்

ரயில்வே ஸ்டேசனின்

நீளமான சிமெண்ட் பெஞ்சில் 

தனியே அமர்ந்திருந்தார் அப்போது


கன்னங்களில் வற்றிய கண்ணீர்த் தடம்

ஆயினும்

முகமென்னவோ இருண்டுவிட வில்லை

அதில் வேறொரு வெளிச்சம்


உலகைக்  கொன்று புதைக்கும் வெறிக்கு பதில்

அவர் வாய்க்கால் பறவைக்கு 

பதில் சொல்லிக் கொண்டிருந்தார்


மிக மிக உறுதியாக

அவர் சிங்கத்தின்  வாயினுள் இல்லை

அந்த இதழ்கடை இனிப்பு கூட

எனக்கு இப்போதும் 

நினைவிருக்கிறது.


காதலில் தோல்வி கண்டவரின் கேசத்தை

அலசுவதற்கென்றே ஒரு காற்றுண்டு

என்பதை அன்றுதான் கண்டு கொண்டேன்

அவ்வளவு அழகை 

அள்ளிக்கொண்டு வரும் காற்று


காதல் தோல்வி சிகரெட்டுகள்

என்றொரு வகையுண்டு தான்


நான் என் முதல் சிகரெட்டை ஏற்றுகிறேன்

அதோ… அந்தக் காற்று வருகிறது


Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நக...

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் ...