Skip to main content

பேய் பங்களா



சந்த மாளிகை என்பது

காதலன் காதலிக்கோ

காதலி காதலனுக்கோ

கட்டி எழுப்பும் கட்டிடமல்ல


காதல்,  மண்ணில் தோன்றுவதில்லை

அதன் பிறப்பே

வசந்தமாளிகையில்தான்


அல்லது


காதல் பிறந்த மறுகணமே

மாளிகை 

வான் அளாவ வளர்ந்துவிடுகிறது


எழுப்பப்பட்ட மாளிகைகளில்

எந்த மாளிகையும்

தரைமட்டமாவதில்லை

பூச்சுக்கள் உதிர்கின்றன

ஆங்காங்கே

புற்றுகள் வளர்கின்றன

கோட்டான்கள் அலறுகின்றன


எல்லா  இடிபாடுகளுக்கிடையேயும்

நினைவுறுப் பேய்கள்

அங்குமிங்குமாய் தாவிக் கொண்டிருக்கின்றன


வாரத்தில்  ஒரு முறையேனும்

நான் என் மாளிகை முன் அமர்ந்து

நீண்ட சிகரெட்டைப் புகைப்பேன்

ஒரு தீபாராதனை போல

அந்தப் பேய்கள் வாழ்க என!


Comments

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.