Skip to main content

கவிதை







டம்மி இசை



வீட்டிலிருந்து 15 நாட்கள்
விடுப்புவேண்டி இருப்பதால்
அமானுஷ்யத்தின் துணைகொண்டு
ஒரு “டம்மிஇசையை” உருவாக்கினேன்.
அதற்கு என் நடை உடை பாவனைகளை கற்பித்தேன்.
ஒரு அலைபேசியை கையளித்தேன்.
மனமுருக அதன் கரங்களைப் பற்றுதலால்
நன்றி பகன்று விடைபெற்றேன்.
மறுநாளே அழைத்த அது
என் மகனின் வீட்டுப்பாடங்கள்
ரொம்பவும் கடினமாக இருப்பதாக சொன்னது.
நாளுக்கு நாள் அதன் புகார்கள்
அதிகரித்துக் கொண்டே வந்தன.
புதிததாய் தனக்கு மூச்சுமுட்டும் வியாதி கண்டிருப்பதாகவும்
சீக்கிரம் வந்துவிடும் படியும்
அது நச்சரிக்கத்துவங்கியபோது
நானதனை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினேன்.
அமானுஷ்யக்காரரிடம் சொல்லி விடுவதாக மிரட்டினேன்.
பிறகு அதன் அழைப்புகள் நின்று விட்டன.
விடுமுறையின் ஏகாந்தம் முடியும் கடைசி நாளில்
என் வருகையைத் தெரிவிக்க
நான் அதை அழைக்க ,


ஒரு பெண் குரல் சொன்னது
“நீங்கள் தொடர்புகொள்ளும்
வாடிக்கையாளர்
பிரபஞ்சத்திற்கு வெளியே இருக்கிறார்”


நன்றி; கல்குதிரை
.

Comments

ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு... நான் ரசிக்கும் இசையின் அருமையான கவிதை..
நடைமுறை வாழ்க்கையில் மனிதர்கள் படும்பாட்டை மிக யதார்த்தமாக கவிதையாக... வாழ்த்துகள் சகோ...
Thendral said…
Can't replace original Isai 😇. Literally laughed out loud

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...