Skip to main content

அப்போது அந்தமுகத்தில் ஒரு சிரிப்பிருந்தது.விழிக்கடையில் கொஞ்சம் நீர் சேர்ந்திருந்தது

ராமகிருஷ்ணன் தான் பிறப்பதற்கு முன்பே
அவர் தாயை
ஆயிரம் முறைக்கும் அதிகமாக
அரசமரத்தை சுற்ற வைத்தார்.
அம்மன் சன்னிதிகளில் அவள் உருண்டு உருண்டு மண்ணானாள்.
நாளெல்லாம் விரதமிருந்தாள்.
இப்படி வாராது வந்த மாணிக்கத்திற்கு
பேச்சு வரவில்லை சரியாக.
அவள் மீண்டும் அலகு குத்தி
காவடி சுமந்து
தீக்குண்டம் இறங்கியேற
அவர் தன் எட்டாம் வயதில் திருவாய்மலர்ந்தார்.
அவர் விண்ணப்பித்த எல்லா பணியிடங்களும்
அதற்கு முந்தைய நாளில் நிரப்பப்பட்டிருந்தன.
"பத்துநாட்களுக்கு முன்னால் சொல்லியிருக்ககூடாதா" என்று
அவர் காதலி அழுது வடிந்தாள்.
அவர் அத்தனை நாளும்
அவளைப் பற்றிய ஒரு காவிய முயற்சியில் மூழ்கியிருந்தார்.
33 மூன்றாம் வயதில் திருமணம் முடிந்த அவருக்கு
5 வருடங்கள் கழித்து
அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இப்போது நரை முற்றி உடல் உளுத்து
துள்ளிதுள்ளி இருமும் அவருக்கு
ஒரு சாவுவந்து தொலையமாட்டேன் என்கிறது.
இந்த நகரத்தின் எல்லா மருத்துவமனைகளிலும்
அவர் உடல் பரிசோதுக்கப்பட்டு குறிப்பெழுதப்பட்டு விட்டது.
இந்த புதிய மருத்துவமனியின் புதிய மருத்துவர்
புதியதொருகுறிப்பிற்காய் பெயரை வினவிய போது
அவர் சொன்னார்
"லேட் ராமகிருஷ்ணன்"

Comments

முகத்தில் சிரிப்பும், விழிக்கோடியில் நீரும்தான் வருகிறது. ரசித்தேன்.
க ரா said…
என்னன்னு சொல்ல இந்த கவிதைய பத்தி. சொல்லாமல் சொல்லும் சோகமாக படுகிறதுதெனக்கு...
:)
இந்த கருப்பு நகைச்சுவை என்ற சுவை இருக்கிறதே :)
இதுக்கு தான் ராமகிருஷ்ணன் பிறக்காமயே இருக்க முயற்சி பண்ணியிருக்கார், அவர் அம்மா சும்மா விட்டாங்களா :)
அல்லது இந்தக்கவிதை இப்படி எழுதப்பட்டு ராமகிருஷ்ணன் இப்படி அல்லலுற வேண்டும் என்பது உங்களையும் மீறிய முன்னமே எழுதப்பட்ட விதியா :)
வாழ்வில் விளையாடும் மதியால் வெல்ல முடியாத விதியை என்னவென்று சொல்வது :(
எல்லாம் எல்லாம் யோசிக்கும் வேளையில்,,,,,,,,,
எல்லாம் எல்லாம் முடிந்து விடுகிறது

நல்ல கவிதை நண்பா

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...