Skip to main content

பதினெட்டாவது குண்டுவெடிப்பு சம்பவம்


     

     


மன்னித்துக்கொள்ளுங்கள் “ 
  என்பது போல
  என் உடைந்த ரிமோட்டை
  அந்தக் கடையின் டேபிளில் வைத்தேன்.
  கடைக்காரர் அதை எடுத்துப் பார்த்தார்.
  ஒரு குண்டு வெடித்தது போல
  அது சிதறியிருந்தது.

 இதழ்க்கடையில் புன்னகைத்த அவர்,
 மன்னித்தோம்  என்பது போல
   புது ரிமோட்டை எடுத்து டேபிளில் வைத்தார்.
   ''எப்படியென்றே தெரியவில்லை... 
    பீரோ மேலிருந்து
    தானாகவே கீழே விழுந்து உடைந்து விட்டது “
    என்று சொன்னேன்.
   அப்போதும் அவர் இதழ்க்கடையில் புன்னகைத்தார்.
   ரிமோட்டுகள் தன்னுயிரை ஈந்து
   எத்தனையோ உயிர்களை காத்து வருகின்றன.
   அவை நம் வாழ்வின் இருண்ட கதைகளை
   தன் சிதைந்த உருவின் வழியே 
   ரகசியமாக  சொல்லி வைக்கின்றன.
   மனித வாழ்வு எவ்வளவு விசித்திரமானதும், சிக்கலானதும்
  என்பதை அறிந்து கொள்ள
  மலைவெளிக்குள் நுழைந்து 
  குகை வழிக்குள் புகுந்து
  ஒரு சிரைக்காத யோகியை போய் பார்க்கப் போகிறீர்களா ?
  நமது ரிமோட் கடைக்காரரைக் கேளுங்கள்...
  அவர் சொல்வார் ஆயிரம்.



Comments

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...