Skip to main content

பதினெட்டாவது குண்டுவெடிப்பு சம்பவம்


     

     


மன்னித்துக்கொள்ளுங்கள் “ 
  என்பது போல
  என் உடைந்த ரிமோட்டை
  அந்தக் கடையின் டேபிளில் வைத்தேன்.
  கடைக்காரர் அதை எடுத்துப் பார்த்தார்.
  ஒரு குண்டு வெடித்தது போல
  அது சிதறியிருந்தது.

 இதழ்க்கடையில் புன்னகைத்த அவர்,
 மன்னித்தோம்  என்பது போல
   புது ரிமோட்டை எடுத்து டேபிளில் வைத்தார்.
   ''எப்படியென்றே தெரியவில்லை... 
    பீரோ மேலிருந்து
    தானாகவே கீழே விழுந்து உடைந்து விட்டது “
    என்று சொன்னேன்.
   அப்போதும் அவர் இதழ்க்கடையில் புன்னகைத்தார்.
   ரிமோட்டுகள் தன்னுயிரை ஈந்து
   எத்தனையோ உயிர்களை காத்து வருகின்றன.
   அவை நம் வாழ்வின் இருண்ட கதைகளை
   தன் சிதைந்த உருவின் வழியே 
   ரகசியமாக  சொல்லி வைக்கின்றன.
   மனித வாழ்வு எவ்வளவு விசித்திரமானதும், சிக்கலானதும்
  என்பதை அறிந்து கொள்ள
  மலைவெளிக்குள் நுழைந்து 
  குகை வழிக்குள் புகுந்து
  ஒரு சிரைக்காத யோகியை போய் பார்க்கப் போகிறீர்களா ?
  நமது ரிமோட் கடைக்காரரைக் கேளுங்கள்...
  அவர் சொல்வார் ஆயிரம்.



Comments

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.