Skip to main content

பீடி மணக்கும் உன் உதட்டிற்கு ஒரு முத்தம்





     
 
 திடும்.. திடும்.. திடும்.. திடும்..
த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்..
த்துடுடுடுடும்.. டுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்..
த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்..
த்துடுடுடுடும்.. டுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்..
திடுமு உறுமியதில் மனத்துக்கண் விழித்துக்  கொண்டது.
தப்பட்டையும் பலகையும் சேர்ந்து
அணைந்து கிடந்த உயிரில் வாய்வைத்து ஊதின.
ஒரு நிமிடம் போதும் ….
காலில் சலங்கையை ஏற்றிவிட்டு
தலையில் ஒரு ஈரிலைத்துண்டை சுற்றிக்கட்ட ..
ஆனாலும் அது இயலாது
ஏனெனில் நான் ஒரு கனவான்
ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்…
ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்…
டுட்டூ.. ட்டு… டூ…  டுடும்
ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்…
ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்…
டுட்டூ.. ட்டு… டூ…  டுடும்..
கனவானுக்கு மறுக்கப்பட்ட களியாட்டத்தின் முன்
கால்களை இறுக்கிக்கொண்டு
நவண்டைக் கடித்த படி நிற்கிறேன்
உதறி உதறி உள்ளேயே விழுகிறேன்
அப்போது பறந்த விசிலிற்கு
அந்த உதட்டை முத்தி எடுக்கவேண்டும்.
கோடி சொற்களைக் கொட்டும் இரட்டைக் குச்சியை
லுங்கிக்கட்டில் செருகிக் கொண்டு போகும்
திடுமுக்காரரே …
உன் அப்பனுக்கு
சிரட்டையில் தண்ணி ஊற்றிய பாவந்தான்
நான் இப்படி
ஒற்றைச் சொல்லிற்கு நாயாய் சாகிறேன்.

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...