Skip to main content

பீடி மணக்கும் உன் உதட்டிற்கு ஒரு முத்தம்





     
 
 திடும்.. திடும்.. திடும்.. திடும்..
த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்..
த்துடுடுடுடும்.. டுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்..
த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்..
த்துடுடுடுடும்.. டுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்..
திடுமு உறுமியதில் மனத்துக்கண் விழித்துக்  கொண்டது.
தப்பட்டையும் பலகையும் சேர்ந்து
அணைந்து கிடந்த உயிரில் வாய்வைத்து ஊதின.
ஒரு நிமிடம் போதும் ….
காலில் சலங்கையை ஏற்றிவிட்டு
தலையில் ஒரு ஈரிலைத்துண்டை சுற்றிக்கட்ட ..
ஆனாலும் அது இயலாது
ஏனெனில் நான் ஒரு கனவான்
ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்…
ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்…
டுட்டூ.. ட்டு… டூ…  டுடும்
ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்…
ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்…
டுட்டூ.. ட்டு… டூ…  டுடும்..
கனவானுக்கு மறுக்கப்பட்ட களியாட்டத்தின் முன்
கால்களை இறுக்கிக்கொண்டு
நவண்டைக் கடித்த படி நிற்கிறேன்
உதறி உதறி உள்ளேயே விழுகிறேன்
அப்போது பறந்த விசிலிற்கு
அந்த உதட்டை முத்தி எடுக்கவேண்டும்.
கோடி சொற்களைக் கொட்டும் இரட்டைக் குச்சியை
லுங்கிக்கட்டில் செருகிக் கொண்டு போகும்
திடுமுக்காரரே …
உன் அப்பனுக்கு
சிரட்டையில் தண்ணி ஊற்றிய பாவந்தான்
நான் இப்படி
ஒற்றைச் சொல்லிற்கு நாயாய் சாகிறேன்.

Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?