Skip to main content

பீடி மணக்கும் உன் உதட்டிற்கு ஒரு முத்தம்





     
 
 திடும்.. திடும்.. திடும்.. திடும்..
த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்..
த்துடுடுடுடும்.. டுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்..
த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்..
த்துடுடுடுடும்.. டுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்..
திடுமு உறுமியதில் மனத்துக்கண் விழித்துக்  கொண்டது.
தப்பட்டையும் பலகையும் சேர்ந்து
அணைந்து கிடந்த உயிரில் வாய்வைத்து ஊதின.
ஒரு நிமிடம் போதும் ….
காலில் சலங்கையை ஏற்றிவிட்டு
தலையில் ஒரு ஈரிலைத்துண்டை சுற்றிக்கட்ட ..
ஆனாலும் அது இயலாது
ஏனெனில் நான் ஒரு கனவான்
ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்…
ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்…
டுட்டூ.. ட்டு… டூ…  டுடும்
ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்…
ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்…
டுட்டூ.. ட்டு… டூ…  டுடும்..
கனவானுக்கு மறுக்கப்பட்ட களியாட்டத்தின் முன்
கால்களை இறுக்கிக்கொண்டு
நவண்டைக் கடித்த படி நிற்கிறேன்
உதறி உதறி உள்ளேயே விழுகிறேன்
அப்போது பறந்த விசிலிற்கு
அந்த உதட்டை முத்தி எடுக்கவேண்டும்.
கோடி சொற்களைக் கொட்டும் இரட்டைக் குச்சியை
லுங்கிக்கட்டில் செருகிக் கொண்டு போகும்
திடுமுக்காரரே …
உன் அப்பனுக்கு
சிரட்டையில் தண்ணி ஊற்றிய பாவந்தான்
நான் இப்படி
ஒற்றைச் சொல்லிற்கு நாயாய் சாகிறேன்.

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.