Skip to main content

வெள்ளைக்கலர்

                       

                  வெள்ளையிலிருந்து
                 எல்லா வண்ணங்களும் பிறக்கின்றன.
                 குறிப்பாக
                 எலுமிச்சைநிறமும் ரோஸ்கலரும்.

              
                 வெள்ளைக்கலருக்கு
                 விண்ணப்ப படிவம்  இல்லை
                 தேர்வுகள் ஏதுமில்லை
                 அது நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.


                வெள்ளைக்கலரை  சிரிக்க வைக்க
                எத்தனை  நகைச்சுவைகள்
                கடைந்தெடுக்கப்படுகின்றன.


               வெள்ளைக்கலரை மகிழ்விக்க
                எத்தனை கவிஞர்கள்
                இரா காக்கிறார்கள்.


                வெள்ளைக்கலரின் ஏடு
                பத்திலிருந்து  நான்கைக் கழித்தால்  ஐந்தென்கிறது.
                கண்டிப்பான தணிக்கையாளன்
                அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறான்.
            

               வெள்ளைக்கலரின் முன்னே
               எத்தனை  மனிதர்கள் உடைந்து சிதறுகிறார்கள் .
               எவ்வளவு மதுப்புட்டிகள் திறக்கப்படுகின்றன.
               எவ்வளவு   கண்ணீர் கொட்டப்படுகிறது.

                சாக்கைடையோரம் கிடந்து
               அழுகியபழம் தின்பவர்களில்
               எத்தனை பேர்
               வெள்ளைக்கலரால் பீடிக்கப்படவர்கள்

              வெள்ளைக்கலரை சாரட்டில் வைத்து
               மேதாவிலாசம் வண்டியிழுப்பதை
               பார்த்துச்சலிக்கிறது வரலாறு.


Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.