Skip to main content

வெள்ளைக்கலர்

                       

                  வெள்ளையிலிருந்து
                 எல்லா வண்ணங்களும் பிறக்கின்றன.
                 குறிப்பாக
                 எலுமிச்சைநிறமும் ரோஸ்கலரும்.

              
                 வெள்ளைக்கலருக்கு
                 விண்ணப்ப படிவம்  இல்லை
                 தேர்வுகள் ஏதுமில்லை
                 அது நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.


                வெள்ளைக்கலரை  சிரிக்க வைக்க
                எத்தனை  நகைச்சுவைகள்
                கடைந்தெடுக்கப்படுகின்றன.


               வெள்ளைக்கலரை மகிழ்விக்க
                எத்தனை கவிஞர்கள்
                இரா காக்கிறார்கள்.


                வெள்ளைக்கலரின் ஏடு
                பத்திலிருந்து  நான்கைக் கழித்தால்  ஐந்தென்கிறது.
                கண்டிப்பான தணிக்கையாளன்
                அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறான்.
            

               வெள்ளைக்கலரின் முன்னே
               எத்தனை  மனிதர்கள் உடைந்து சிதறுகிறார்கள் .
               எவ்வளவு மதுப்புட்டிகள் திறக்கப்படுகின்றன.
               எவ்வளவு   கண்ணீர் கொட்டப்படுகிறது.

                சாக்கைடையோரம் கிடந்து
               அழுகியபழம் தின்பவர்களில்
               எத்தனை பேர்
               வெள்ளைக்கலரால் பீடிக்கப்படவர்கள்

              வெள்ளைக்கலரை சாரட்டில் வைத்து
               மேதாவிலாசம் வண்டியிழுப்பதை
               பார்த்துச்சலிக்கிறது வரலாறு.


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...