அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments
மாருதமோ நிந்தன் எழுத்து.
மனப்பரப்பெங்கும் ஊடுருவி
இரத்த நாளங்களில் விரவி
மின்னல் நரம்புகளில் இறுதி
உயிரென உருகி
உள்ளுணர் வீதியின் வெளிச்சங்களைப் பருகி
எந்தன் புலன்களைத் திருகி
இசையென ஜாலமிடுகிறது
நின் எழுத்து...
எழுத வாய்க்கிறது.