Skip to main content

QUOTE - களின் காலம்


           




1.
      “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."
 என்கிற கோட்டின் வழியே
 கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.
 

 2.

       தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும்.


3.
    கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்
  எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது
  ஒரு கோட் !

4.
    வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்
    ஒரு கோட்டாக.



5
        கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக 
       நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்
       பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்
      

6
      வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்
    என்கிற கோட்டிலிருந்து
    பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்
    அத்தனை பேக்கரிகளும்.

7.
     
     எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;
     ஆனால் கோட்களின்றி ஓடாது
      என்பான் புத்திசாலி.
  
  8.
 
     இல்லத்து அரசியரே!
     உங்கள் மனாளனின் அடிவயிற்றில்
     ஓங்கி ஒரு உதை விட
    பொன்னான வாய்ப்பு....
     பதிவிறக்கம் செய்வீர்
    " share chat "


9.
    நட்பிலிருந்து காதலுக்கு அழைக்க
    100 கோட்கள் தேவைப்படுகின்றன.
    காதலிலிருந்து கட்டிலுக்கு  நகர்த்தவோ
   ஆயிரம் வரை  செலவழிக்க வேண்டியிருக்கிறது
  என்று அலுத்துக் கொள்கிறான் 
  ஒரு தத்துவாசிரியன்.


 10.
        
  உன்  800 பக்க நாவலில் 
  அந்த இரண்டு வரிக் கோட்டை நீக்கி விடச்             சொன்னால்
 ஏன் பதறியடித்து ஓடுகிறாய் தஸ்தேவ்யஸ்கி ?



11.
     கோட்களை கேலி செய்து நீ எழுதிய கோட்தான்
     இன்று
    கோட்களுக்கெல்லாம் மேலான  கோட்டாக
    கோலோச்சிக்  கொண்டிருப்பதை
    அறிவாயா நாகராஜா?

12.
    பிடித்துத் தொங்க  கோட்களேதும் மிச்சமில்லை
   என்றான பிறகுதான்
   ஒருவன் தூக்குக் கயிற்றில் தொங்கி         விடுவதென்ற   தீர்மானத்திற்கு வருகிறான்.

13.
   எனதருமை கோட்களே !
   நீங்கள் கடவுளரைப் போலன்றி  ஓரவஞ்சனை செய்யாதிருங்கள் !


            நன்றி : காலச்சுவடு- செம்டம்பர்-18
  
 

Comments

nikkisa889 said…
Can I just say what a aid to seek out someone who really is aware of what theyre talking about on the internet. You definitely know find out how to bring a difficulty to light and make it important. More folks need to learn this and understand this facet of the story. I cant imagine youre not more common because you positively have the gift. gsn casino slots
நாளை மற்றுமொரு நாளே
Thendral said…
Very strong pen skill with positive thoughts. Simple man with powerful words. Blessed with elegant writing skills that replicate your inner soul.

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...