முனகலுக்கும் எரிச்சலுக்கும் இடையே
உறுமலுக்கும் சங்கிலிச் சத்தத்திற்குமிடையே
இன்று
ஒரு முழு நிமிடம்
சிக்னலுக்கு முன் கைகட்டி நின்றேன்.
"இப்படி
ஒவ்வொரு நாளும்
ஒரு முழுநிமிடம்
எதன் முன்னேனும் கைகட்டி நில்" என்று
எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
***
முனகலுக்கும் எரிச்சலுக்கும் இடையே
உறுமலுக்கும் சங்கிலிச் சத்தத்திற்குமிடையே
இன்று
ஒரு முழு நிமிடம்
சிக்னலுக்கு முன் கைகட்டி நின்றேன்.
இவ்வளவு காலத்தில்
சிக்னலிடம்
ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.
" இங்கதான்..சந்தைக்கு..கீரை வாங்கப் போகிறேன்" என்றேன்.
" மிக்க மகிழ்ச்சி.. பத்திரமாக போய் வாருங்கள்.. " என்றது.
Comments