பூனைக்குட்டிகளைத் தடவித் தருகையில் கொதிக்கும் சமுத்திரம் வாளிக்குள் தூங்குகிறது. புற்றுக்கட்டிகள் மெல்ல மெல்லக் கரைகின்றன பூனைக்குட்டிகளைத் தடவித் தருகையில் உலகம் இதமாகிறது. பொக்கிஷம் தென்பட்டவுடனே முகமூடிக் கொள்ளையரும் தென்பட்டுவிடுவதால் நமக்கு பூனைக்குட்டிகள் அவசியம். பூனைக்குட்டியைத் தடவித் தருகையில் நம் தலை மாயத்தில் மறைந்துவிடுகிறது. என் அம்மா செத்துப்போய் அவளை நடுவீட்டில் வைத்திருந்த ராத்திரியில் எனக்கு யாருமே இருக்கவில்லை. நான் ரகசியமாக பெர்மூடாசுக்குள்ளிருந்து என் பூனைக்குட்டியை வெளியே எடுத்து தடவித்தரத் துவங்கினேன். நன்றி ; காலச்சுவடு - ஆகஸ்ட் இதழ் |
Comments