நெஞ்சே! இனிய கற்பனைகளை நிறுத்தாதே. நீ பார்த்துத் தீராத உன் சமாதிகளில் ஏதேனும் ஒன்றில் மல்லாந்து படுத்தபடியே அடுத்த கற்பனையைக் கட்டு பலூனில் காற்றை ஊதுவது போல் உன் நெஞ்சில் வாய் வைத்து ஊது. "மனிதன் அப்பத்தால் மட்டுமே வாழ்ந்து விடுவதில்லை" அவனால் வானத்தில் பறக்காமல் பூமியில் நடக்க இயலாது. பாட்டி வடை சுடுவதை நிறுத்திவிட்டால் நிலவு வெடித்துவிடும் ஊட்டு! அன்னை ஊட்டுவது போல் உனக்கு நீயே உருட்டு உருட்டி ஊட்டு! |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments