நெடுஞ்சாலை ஓரத்தில் இன்னும் வெட்டப்படாதிருக்கும் ஒரு புளியமர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன இரு காதல் உள்ளங்கள் இருசக்கர வாகனத்து இருக்கையின் மீது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது ஒரு எளிய உணவு. அவள் அதை ஸ்பூனால் எடுத்து அவனுக்கு ஊட்டுகிறாள். அவன் மென்று மென்று விழுங்குகிறான் அவள் நாணத்துச் சிவப்பை. சிலர் அதைக் கண்டும் காணாதது போல் முகம் திருப்பிச் செல்கிறார்கள் சிலர் உற்றுக் கவனித்து ஏசிப் போகிறார்கள். அந்த விருந்தைக் கடக்கையில் அவளும் அறியாது அவனும் அறியாது நானும் உண்டேன் ஒரு வாய். . |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments