அவளுக்கு மொத்தம் மூன்று வாய்கள் அணிலோடித் திரியும் முற்றத்தில் நின்றுகொண்டு வேடிக்கை காட்டியபடியே பிள்ளைகளுக்கு உணவூட்டுவாள் சேலைத் தலைப்பை பிடித்தபடி கால்களையே சுற்றிச் சுற்றிக் குழையும் ஒன்று. இன்னொன்று இடுப்பில் அமர்ந்திருக்கும். இருவருக்கும் மாறி மாறி ஊட்டுவாள் யாரோ ஒருவர் முரண்டுபிடித்து சிணுங்குகையில் "அணிலுக்கு ஊட்டி விடுவேன்" என்று மிரட்டுவாள். நாளடைவில் ஓட்டங்களிலிருந்து ஆசுவாசத்திற்குத் திரும்பியது அணில். மெல்ல மெல்ல அச்சத்திலிருந்தும் சந்தேகத்திலிருந்தும் கீழிறங்கி வந்தது அது. மெல்ல மெல்ல மேலெழும்பி வந்தாள் அன்னை. இன்று கொஞ்சம் அமுதெடுத்து அணிலுக்கு ஊட்டினாள் பேரன்னை. அப்போது அவளுக்கு அளவிறந்த வாய்கள். நன்றி: ஏழிலைப்பாலை PC Sandhya Pallissery |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments