ஒருவன் வழக்கமான தன்னை உடைத்து குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட்டு பேரணியில் கலக்கிறான். இவன் இன்னொருவன் மகத்தானவன். தனி ஆட்கள் சேர்ந்து சேர்ந்து உருவாகிறது ஓர் அணி. அணிகள் கூடிக்கூடி அலையடிக்கிறது பேரணி. நெருப்பினால் இழுத்துக்கட்டப்பட்ட பேரணிகள் பிரம்மாண்ட பேரணிகளாகி சடசடக்கின்றன. தொண்டையிலிருந்து எழும் முழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி இதயத்தை அடைகின்றன. நெஞ்சமே குரலாகி கூவி இடிக்கையில் ஒவ்வொருவரும் தனித்தனி பிரம்மாண்டம். (தோழர் சுகுமாரனுக்கு) |

Comments