Skip to main content

சுழற்பந்து

 



50 ல் நிற்கும் ஒரு மனிதனுக்கு

அதிகாலையில் அவசரமாக 

ஒரு எலுமிச்சை தேவைப்பட்டுவிட்டது


பக்கத்துக் கடையில் இருப்பு இல்லாததால்

அவர் கொஞ்ச தூரம் நடக்க வேண்டி இருந்தது.


மனிதன் ஒரு போதும் தனியே நடப்பதில்லை.


வாங்கிய எலுமிச்சையை

ஏனோ திடீரென 

சுற்றத் துவங்கிவிட்டார்


எங்கிருந்தோ எழுந்து வந்தான்

ஒரு சுழற்பந்து வீச்சாளன்


அடுத்த கணம்

அவர் அந்தரத்தில் சுழற்றி விட்ட பந்து

பெரிய மைதானத்தில்

நடு ஸ்டம்பை கழற்றிக் கொண்டோடியது.

கரகோஷங்களுக்கும்

வெறிக் கூச்சல்களுக்குமிடையே

களிமுற்றி ஆடுகிறார். 


ஆட்டம் முடிவதற்குள் 

வாசல் வந்துவிட்டது.


பந்து ஒன்றுமே தெரியாதது போல்

எலுமிச்சைக்குத் திரும்பி விட்டது.


சின்ன எலுமிச்சைக்குள்

இவ்வளவா சுற்றிக் கொண்டிருக்கும்?


அறிந்திருந்தால்

அவர் காலை உணவைத் தவிர்த்திருப்பார்.


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...