Skip to main content

கொழு நிழலி

 



டற்பயிற்சி மைதானத்துக்கு அருகில்

வேங்கை மரத்திற்கு அடியில்

இன்னொரு வேங்கை மரமென

திகழ்கிறாள்.

அவள் கொழு நிழலின்  கீழ்

குழுமியிருக்கின்றனர் சிலர்.


இளமையைக் கடந்து விட்டவள்

வசீகரம் குறைந்தவள்.

காமத்தால் எரிக்க முடியாதவள்

கொஞ்சம்

கலகலப்பானவள்


ஒருவன் நெல்லிக்கனி சாறு பருகிக் கொண்டிருக்கிறான்


ஒருவனுக்கு கொள்ளு ரசம்


ஒருவன் அவித்த சுண்டலை வாங்குகிறான்.


அவளது

வதங்கிய கீரையை

யாரும் நம்புவது போலத் தெரியவில்லை.


ஆயினும்

அவள் அண்மையில் இருக்கையில்

இரத்தம் சுத்தகரிக்கப்படுவதை

நன்றாகவே

உணர முடிகிறது


வயிற்றுப் புண் 

உடனடியாக சரியாகி விடுகிறது.


அவள் 

"இதயத்திற்கு நல்லது" 

என்று 

எழுதிப் போட்டிருப்பதை படித்துப் பார்த்து 

இதயம் 

"ஆம்" என்கிறது.


பலஹீனத்தால் துவண்டிருக்கும்

இந்த அதிகாலையில்

முளைகட்டிய பயிர் அருகில்

கொஞ்ச நேரம்

நின்று விட்டு வந்தேன்.

Comments

Thendral said…
அருமையான வரிகள் 🌳

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...