நரை கூடக் கூட குயில் கூவத்துவங்கி விடுகிறது. “குயில் ஒரு க்ளிஷே” என்று சொன்னவன் ஒரு அதிரடி ஆட்டக்காரன் அவன் தலையைக் குனிந்தபடி மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறான் குயில் இன்றில் அமர்ந்து நேற்றைப் பாடும் ஒரு பறவை அதன் மரத்தடியில் அவன் நெடுநேரம் அமர்ந்திருக்கிறான் க்கு…கூ... க்கு…கூ... க்கு. .கூ... ஒவ்வொருவனுக்கும் நினைத்து ஏங்க ஒன்றுண்டு அல்லது நினைக்க ஒன்று வேண்டும் என்று அவன் எப்போதும் ஏங்குகிறான் முதுமையைத் தேற்ற ஒரு சின்னசோகம் அவசியம் குயில் அதன் வாத்தியம். |

Comments