Skip to main content

ஆங்கிலத்தை இவர்கள் அறிவில்லா முண்டமெனக் கருதிவிட்டார்கள்



“தூங்காதே தம்பி…தூங்காதே..” என்பது

காலாவதியாகிவிட்ட ஒரு அறிவுரை


இன்றோ

“தூங்குங்கள்…! தூங்குங்கள்..! என்று

கை கூப்பி வேண்டுகிறது மருத்துவம்


அவர்கள் இருவருமே

தேக ஆரோக்கியத்தில்

கவனம் கொண்டவர்கள்

ஆகவே

சரியாக பத்துமணிக்கு

“good night” சொல்லிக் கொள்வார்கள்.


அரைமணி நேரம்  கழித்து

அடுத்த “ good night “


“ good night ..!”


“ good  night…!”


“Good  night” க்கு தானொரு 

“good night” தானா என்பதில்

கொடூரமான குழப்பங்கள் தோன்றிவிட்டன


அது புரட்டிய அத்தனை அகராதிகளும்

ஆலோசித்த அவ்வளவு அறிஞர்களும்

“good night “  என்றால் " good night" தான்

என்று சொல்லி

அதை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள்


இரும்புக் கதவில் 

தலையை முட்டிக் கொண்டு

அது இரத்தம் பெருக்கிய பொழுதில்

அவர்கள் 13 வது “ good night” 

சொல்லிக் கொண்டார்கள்.


சிற்றஞ்சிறுகாலை என்கிற

“ good morning “ - ல்

“ ok.. good night ..“ என்றவர்கள்

அலுத்துக் கொண்ட போது

ஆங்கிலத்திற்கு வெறி மூண்டுவிட்டது

இரண்டு பொடணியிலும்

பொளோர் பொளோரென

நான்கு போடு போட்டது…


“எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை  உண்டல்லவா? “


Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் ...

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நக...