“தூங்காதே தம்பி…தூங்காதே..” என்பது காலாவதியாகிவிட்ட ஒரு அறிவுரை இன்றோ “தூங்குங்கள்…! தூங்குங்கள்..! என்று கை கூப்பி வேண்டுகிறது மருத்துவம் அவர்கள் இருவருமே தேக ஆரோக்கியத்தில் கவனம் கொண்டவர்கள் ஆகவே சரியாக பத்துமணிக்கு “good night” சொல்லிக் கொள்வார்கள். அரைமணி நேரம் கழித்து அடுத்த “ good night “ “ good night ..!” “ good night…!” “Good night” க்கு தானொரு “good night” தானா என்பதில் கொடூரமான குழப்பங்கள் தோன்றிவிட்டன அது புரட்டிய அத்தனை அகராதிகளும் ஆலோசித்த அவ்வளவு அறிஞர்களும் “good night “ என்றால் " good night" தான் என்று சொல்லி அதை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள் இரும்புக் கதவில் தலையை முட்டிக் கொண்டு அது இரத்தம் பெருக்கிய பொழுதில் அவர்கள் 13 வது “ good night” சொல்லிக் கொண்டார்கள். சிற்றஞ்சிறுகாலை என்கிற “ good morning “ - ல் “ ok.. good night ..“ என்றவர்கள் அலுத்துக் கொண்ட போது ஆங்கிலத்திற்கு வெறி மூண்டுவிட்டது இரண்டு பொடணியிலும் பொளோர் பொளோரென நான்கு போடு போட்டது… “எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டல்லவா? “ |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments