Skip to main content

மூன்று கவிதைகள்




றுமணம் கொண்ட விசாலமான படுக்கை


நட்சத்திர விடுதியின்

விசாலமான அறையைத்

திறந்து காட்டிய  பணியாள் 

"நன்றி!"  என்று

சொல்லிவிட்டு நகர்கிறான்.


நான்

உடைந்து அழுகிறேன்


*


சப்பின் குஷன்


நான் மீண்டும்

கசப்பிற்குத் திரும்பினேன்.


மகனைப் போருக்கு அனுப்பி விட்ட தாய் போல

அது வாசலிலேயே நின்று கொண்டிருந்தது


கசப்பு 

ஒரு செளகர்யம்

ஆதுரம்


மேலும் அது எனக்கு
நன்கு பரிச்சயமானது

அதில்
பரபரப்பில்லை.
பதற்றமில்லை

சாகசங்களில் வெறி மூண்ட 
வேட்டையாள் ஒருவன்
துப்பாக்கியை இறக்கி வைத்து விட்டு
இப்போது
புளியமரத்தடியொன்றில்
தலை சாய்த்துக் கிடக்கிறான்

கசப்பில்
கசப்பைத் தவிர 
வேறு ஒன்றுமேயில்லை

முக்கியமாக
இனிப்பில் இருக்கிற
"உள்ளே என்ன இருக்கிறதோ?" 
என்கிற
வெடிகுண்டில்லை

*

ல்லாவற்றிற்கும் நன்றி!

காதலர்
வெடித்துச் சினக்கின்றனர்.

கண்ணீர் வடிக்கின்றனர்.

பிரிவே உத்தமம்  என்று 
உறுதி பூண்கின்றனர்

"எல்லாவற்றிற்கும் நன்றி!" 
என்றவர்கள்
பரஸ்பரம் செய்தி அனுப்பிக் கொள்கையில்
"எதுவுமே இன்னும் முடியவில்லை" என்று
எங்கிருந்தோ ஒலிக்கும் ஒரு குரல்...

அது யாருடைய குரல்

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் ...

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நக...