Skip to main content

குடும்ப நாய் ; சில சித்திரங்கள்

1. ஒரு குடும்ப நாய்
குடும்பத்தைத் தின்று
குடும்பத்தை பேண்டு
அதையே தின்று
அதையே பேழ்வது.







2. உண்மையில் குடும்பநாய்களுக்கு
சங்கிலியோ கயிரோ தேவையில்லை.

3 . குடும்ப நாய்களை நாம் பரிசோதிக்க வேண்டியதில்லை.
அவை சிச்சயம் நல்ல சாதி நாய்கள்


4 உலைத்து உலைத்து ஓடாய் தேய்பவை
குடும்ப நாய்கள்.
பெரும்பாலும் அதன் உலைப்பு காற்றில் போய்விடுகிறது.

5. குடும்ப நாய்கள்
சமயங்களில்
திருட்டு பூனைகள்.

6. குடும்ப நாய்களுக்கு
விசாலமான வீடுகள் உண்டு.
என்றாலும்
அவை அசுத்தமான விடுதிகளிலேயே
சுத்தமான காற்று கிடைப்பதாக சொல்கின்றன.
எனவே சில நேரங்களில்
சொந்த ஊரிலேயே அறை எடுத்து தங்குகின்றன.

7. குடும்ப நாய்களிலும்
பெட்டைகள் இன்னும் பாவம்
அவை பாத்ரூம்களில்
மட்டும் நடனமாட அனுமதிக்க பட்டவை

8. குடும்ப நாயின் கர்ப்பக்குட்டிகளின்
வயிற்றில் வளர்ந்து வருகிறது
சலாமிடுதல் என்கிற பட்டறிவு.



9. குடும்ப நாய்கள் ரொம்பவும் மனசாட்சிக்கு பயந்தவை.
எனவே
எல்லா அநீதிகளுக்கெதிராகவும்
அவை இரண்டு முறை குரைத்து விடுகின்றன.



10. ஒரு குடும்ப நாய்
தன் வாழ்வில் ஒரு முறையேனும்
தண்டவாளத்தை உற்றுப் பார்க்கிறது.


11 . சில குடும்ப நாய்கள்
உத்தரத்தில் தொங்கி
கவரி மான்கள் ஆகின்றன

Comments

சிரிக்காமல் படிக்கமுடிந்தால், அது சாதனைதான்.கலக்கல் நண்பா.
இப்படிக்கு
-ஒரு குடும்ப நாய்
துல்லியமான கண்ணாடி போல இந்த கவிதை.ஒரு குடும்பத்தின் அத்தனை சுவர்களையும் அதன் கீறல்களோடும், சதுர திரும்பல்களோடும் அப்பட்டமாகப் பார்க்க முடிந்தது. கூடவே முகத்தையும். இவ்வளவு உண்மையான கவிதையாவென விதிர்விதிர்ப்பாகவும் இருந்தது.எழுத்தின் வன்மைக்குப் பாராட்டுக்கள்.

Popular posts from this blog

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...