Skip to main content

பாலசுப்ரமணியம் கவிதை


இந்த இரவில் விழித்திருந்து
இரவின் கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

முத்தமிட்ட இதழ்கள்
ஒற்றை மர உதிரும் மஞ்சள் நிற இலைகள்
மயக்கமூட்டும் மதுக்குடுவையின் மூடிகள்
காணவே காண முடியாத
தூரக் கிணறுகளின் ஆழ மீன்கள்
மற்றும்
என் நண்பர்கள் தங்கள் மனைவிகளோடு
உறங்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறேன்

இந்த மழைக்காலத்தில்
வெய்யில் எவ்வளவு விருப்பமானதோ
அப்படித்தான்
எனக்கும் இரவின் கண்களைப் பார்ப்பதும்
ஆனாலும் பெரியதொரு குற்றச்சாட்டோடு

அப்போதுதான்
நான் கண்ணீர் நிரம்பிய மெத்தைகளில்
புரண்டு படுக்கிறேன்.

Comments

மழை said…
இந்த மழைக்காலத்தில்
வெய்யில் எவ்வளவு விருப்பமானதோ
அப்படித்தான்
எனக்கும் இரவின் கண்களைப் பார்ப்பதும்
ஆனாலும் பெரியதொரு குற்றச்சாட்டோடு///

நன்று:)

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.