Skip to main content

அந்தக் காலம் மலையேறிப் போனது





என் வீட்டுக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது.

ஆறு வயதில் விரல் சூப்பூம் பழக்கத்தை
இந்த மலை மீது தான் ஏற்றி விட்டேன்
.
அன்னைக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்களையும்
ஒரு நள்ளிரவில் இந்த மலைக்கு அனுப்பினேன்

கிரிக்கெட் மட்டை, கை மைக், கீ- போர்டு
எல்லாவற்றையும் இந்த மலைதான் வாங்கிக் கொண்டது

ஒரு காதல் மட்டும் இந்த மலை மீது
ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தது வெகுகாலமாக.

நேற்றது உச்சிக்கு சென்று மறைந்ததை பார்த்தேன் .

Comments

மலையேறிய காதல்
மீண்டும் உடுக்கையடித்தால் வரக்கூடும்.
ஒருவேளை சென்று தொலைந்ததாக இல்லாமல்
விட்டெரிந்ததாக இருப்பின் கவனமாக இருங்கள் இசை.

அடர்வான கவிதை, பாராட்டுக்கள்.
-இயற்கைசிவம் www.veyilnathi.blogspot.com

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.