கடைசியில்
அவமானங்களுக்கு நான் "ஐஸ்கிரீம்" என்று பெயர் சூட்டிவிட்டேன். இவ்வளவு பெரிய மோசடியை அவை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆத்திரம் தலைக்கேற பெருந்திடலில் ஒன்று கூடி "நாங்கள் அவமானங்கள்!" "நாங்கள் அவமானங்கள்! " என்று காட்டுக் கத்தலாய் கத்துகின்றன நமட்டுச் சிரிப்பை ஒளித்தபடி “ஐஸ்க்ரீம்களே! “ஐஸ்கிரீம்களே! என்று கூவி அழைத்தேன். |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments