கடைசியில்
அவமானங்களுக்கு நான் "ஐஸ்கிரீம்" என்று பெயர் சூட்டிவிட்டேன். இவ்வளவு பெரிய மோசடியை அவை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆத்திரம் தலைக்கேற பெருந்திடலில் ஒன்று கூடி "நாங்கள் அவமானங்கள்!" "நாங்கள் அவமானங்கள்! " என்று காட்டுக் கத்தலாய் கத்துகின்றன நமட்டுச் சிரிப்பை ஒளித்தபடி “ஐஸ்க்ரீம்களே! “ஐஸ்கிரீம்களே! என்று கூவி அழைத்தேன். |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments