வீட்டிலிருந்து
இதயங்களிலிருந்து அறிவிலிருந்து ஆலயங்களில் இருந்து போதைகளில் இருந்து பொருட்களிலிருந்து ஒளிந்து கொண்ட ஒவ்வொன்றிலிருந்தும் ஓட ஓட விரட்டப்பட்டேன் தண்டவாளத்தில் ஒளிந்து கொள்ள அவ்வளவு பயம். ஒரு கவி செம்பருத்தியின் குழலைக்காட்டி " இதற்குள் இரு" என்கிறான். இவ்வளவு பெரிய நான் இதற்குள் ஒடுங்க இயலுமா? ஆனால் இது புதிதாக இருக்கிறது. இனிதாக இருக்கிறது. ஒளிந்து கொண்டது போலவே ஆகிவிட்டது. |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments