அண்டைவீட்டு மனிதன் பால்கனியில் கையில் அழகான காபி கோப்பையை ஏந்தியபடி ஷோக்காக அமர்ந்து கொண்டு ஒரு புத்தகத்துள் ஆழ்ந்திருந்தான். நான் அனிருத்தை இன்னும் கொஞ்சம் அலறவிட்டேன். அவன் முகந்திரிந்து கோணுவதைக் கண்டேன். கோணிய முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சட்டென மலர்ந்துவிட்டது. கைகள் ஆனந்தித்து தாளமிட்டன. இவ்வளவுதான் சத்தம் இதற்குமேல் திருகினால் குழாய் உடைந்துவிடும். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நண்பனொருன் என் திருமணப்பரிசாக வழங்கிய அந்த தடித்த புத்தகத்தை எடுத்துவந்து ஆக்ரோஷமாக வாசிக்கத் துவங்கிவிட்டேன். |

Comments