அந்த செவ்வரளிக் கூட்டம்
பாட்டிக்கு எட்டவில்லை. நடைப்பயிற்சியில் மூச்சிரைத்துக் கொண்டிருந்தவனை நிறுத்தி உதவக் கோரினாள். நான் அதைப் பறிக்கப் பறிக்கவே சமர்ப்பித்து விட்டேன். பறிக்கப்பறிக்கவே வேண்டிக் கொண்டு விட்டேன். பறிக்கப் பறிக்கவே வேண்டியதைப் பெற்றுக் கொண்டேன். பாட்டிக்கு எட்டாத உயரத்தில் மலர்ந்த மலரே! பாட்டிக்கு எட்டாத உயரத்தில் மலர்ந்த மலரே! |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments