அந்த செவ்வரளிக் கூட்டம்
பாட்டிக்கு எட்டவில்லை. நடைப்பயிற்சியில் மூச்சிரைத்துக் கொண்டிருந்தவனை நிறுத்தி உதவக் கோரினாள். நான் அதைப் பறிக்கப் பறிக்கவே சமர்ப்பித்து விட்டேன். பறிக்கப்பறிக்கவே வேண்டிக் கொண்டு விட்டேன். பறிக்கப் பறிக்கவே வேண்டியதைப் பெற்றுக் கொண்டேன். பாட்டிக்கு எட்டாத உயரத்தில் மலர்ந்த மலரே! பாட்டிக்கு எட்டாத உயரத்தில் மலர்ந்த மலரே! |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments