Skip to main content

அன்புள்ள சாம்ராஜிற்கு - வரதராஜன் ராஜு



சாம், நேற்று சட்டென்று பேச வரவில்லை. ஆனால் பேசியிருக்க வேண்டும். விஜியைப் போல நல்ல வார்த்தை ஒன்றாவது நான் சொல்லியிருக்க வேண்டும். அந்தச் சொல்லுக்காகவும் அது தந்த தூண்டுதலுக்காகவும் விஜிக்கு எனது நன்றி.

உங்களுக்கும் சரோவிற்கும் மணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் அதை மண வாழ்வு என்று சொல்ல மாட்டீர்கள். அதனாலென்ன. குழந்தைகள், அவர்களை வளர்ப்பதற்கான ஒரு கூரை, அதைச் சாதிக்கும் பொருட்டான ஒரு பொருளியல் செயல்பாடு என்ற ஒன்றை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக் கொள்ளலாம்.



இந்த ஆறு வருடத்தில், முதல் இரண்டு வருடங்கள் உங்கள் இருவருக்கும் அலைக்கழிப்பான நாட்கள். ஆரண்யா வந்த பிறகான நான்கு வருடங்களே நீங்கள் ஒரே கூரையின் கீழ் அமைந்தீர்கள். அது பெசண்ட் நகர் வீடு என்றழைக்கப்பட்டது. நண்பர்களுக்கிடையில் சுருக்கமாக 'பெசண்ட் நகர்' என்றே அழைக்கப்பட்டது. ஒரு நான்கு வருடங்களில் அந்த வீடு ஒரு பெரிய சாப்பாட்டு மேசையென்றாகிவிட்டிருக்கிறது. நான் சிறு வயதிலிருந்தே பெருங்கூட்டமாக உணவருந்திப் பழக்கப் பட்டவன். சிறு வயதில் வீடு ஆளும் பேருமாக இருக்கும். உங்களுக்குத் தெரியும் வீட்டாட்களே எப்பொழுதும் பத்து பேரிருப்பார்கள். அதனாலேயெ பெரிய சாப்பாட்டு வட்டங்கள் எனக்கு ஒரு மேடையெனப் பழகிவிட்டன. அங்கே நீங்கள் உழப்பும் ஒரு குழந்தையை, ஒரு கள்ளனை, பேராசைக்காரனை, ஒரு கோமாளியை, கருணை மிக்க ஒரு கொடையாளியை, ஒரு துறவியைக் காணமுடியும். மேசை விரிய விரிய அதன் சாத்தியப்பாடுகளும் கூடும்.முந்தைய தலைமுறைபோல எதிர்காலப் பொருளியல் திட்டங்களை ஒரு மதம் என ஒழுகாத மனமே இதைச் சாத்தியமாக்கும். இன்றைய சிறுகுடும்பப் பொருளியலில் இதை ஊதாரித்தனம் என்று சொல்லிவிடலாம். எனது பெற்றோரிடம் இந்தப் பண்புகளைப் பார்த்திருக்கிறேன்.



நீங்கள் எனக்கு அறிமுகமான நாளிலிருந்து நான் பெற்ற நட்புகளை நினைத்துப் பார்க்கிறேன். லிபி, ஷங்கர், இசை, கவின், சாம்சன் என்று அது நீளுகிறது. அவையெல்லாம் மேற்படி சாப்பாட்டு மேசையில் கிடைத்தவைதாம். பெசண்ட் நகரை ஒரு சாப்பாட்டு மேசை என்று அழைக்கலாம்.
அந்த சாப்பாட்டு மேசையை ஒரு தொடரோட்டமாக ஆக்கியதில் உங்களுக்கு இருக்கும் பங்கிற்கு நிகரானது சரோவினுடையது. ஆளும் பேருமாக இருப்பதில் நீங்கள் இருவருமே மகிழ்பவர்கள். அது எவ்வளவு தற்காலிகமானதென்று தெரிந்தாலும் குழந்தைகளைப் போல அந்த விளையாட்டை விளையாடிக் கொண்டே இருப்பீர்கள். சிறு வயதில் நித்திலா வீட்டுக்கு வருபவர்களில் அவளுக்கு பிடித்தமானவர்களிடம், ‘நீங்க எப்ப போவீங்க?’ என்று கேட்பாள். தனக்குக் கிடைத்திருக்கும் விளையாட்டு பீரியட் எவ்வளவு நேரம் என்று அவள் கணக்கிடும் முறைமை அது.


கடந்த முறை சரோ மதுரை வந்த போது நித்திலாவுக்குக் கொடுத்த ’கேக் சட்டியை’ அவள் பக்கத்து வீட்டிலிருக்கும் உத்தரப் பிரதேச இளைஞிக்குக் கொடுத்து இருவரும் சேர்ந்து, நல்ல மணத்துடன் ’ஓரியோ’ கேக் செய்தனர். நீங்கள் புத்தகங்களைக் கொடுப்பவரென்றால் சரோ சோற்றுச் சட்டியைக் கொடுப்பவர். இப்போது டெஸ்ஸா வந்து நீங்கள் வீடு மாறிவிட்டீர்கள். ஆனாலும் சாப்பாட்டு மேசை பெசண்ட் நகரில்தான் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம