தொண்டைக்குழிக்குள் குச்சியைச் செலுத்தி
சளி சேகரித்த அந்தத் தாதி மல்லிகை சூடியிருந்தாள். மல்லிகையின் கீழ் அமர்ந்து பரிசோதனை செய்து கொண்டேன். நான் மருந்துவரைக் காண்பேன். மருந்துகள் எடுத்துக் கொள்வேன். அரசு சொல்லும் அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடிப்பேன். ஆனால், மல்லிகையே ! நான் உன்னைத்தான் நம்பியுள்ளேன். |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments