தொண்டைக்குழிக்குள் குச்சியைச் செலுத்தி
சளி சேகரித்த அந்தத் தாதி மல்லிகை சூடியிருந்தாள். மல்லிகையின் கீழ் அமர்ந்து பரிசோதனை செய்து கொண்டேன். நான் மருந்துவரைக் காண்பேன். மருந்துகள் எடுத்துக் கொள்வேன். அரசு சொல்லும் அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடிப்பேன். ஆனால், மல்லிகையே ! நான் உன்னைத்தான் நம்பியுள்ளேன். |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments