ததும்புவதைக் காணும் போது
மனிதனுக்கு என்னவோ ஆகிவிடுகிறது. கடற்கரைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மலரில் ததும்பும் ஒன்றை யுகயுகமாக கண்டு தீர்க்கிறான் கவி ஒரு வயலின் ததும்பும்போது சகலமும் ததும்பிவிடுகிறது. பெண்ணின் காலடியில் கொட்டிக்கிடக்கின்றன கணக்கற்ற மண்டையோடுகள். எல்லாம் அவளில் ததும்பும் அதுவைக் காண வந்தவை. |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments