ததும்புவதைக் காணும் போது
மனிதனுக்கு என்னவோ ஆகிவிடுகிறது. கடற்கரைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மலரில் ததும்பும் ஒன்றை யுகயுகமாக கண்டு தீர்க்கிறான் கவி ஒரு வயலின் ததும்பும்போது சகலமும் ததும்பிவிடுகிறது. பெண்ணின் காலடியில் கொட்டிக்கிடக்கின்றன கணக்கற்ற மண்டையோடுகள். எல்லாம் அவளில் ததும்பும் அதுவைக் காண வந்தவை. |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments