1. தாவாங்கட்டையில் அணிந்திருக்கும் நைந்த மாஸ்க்கோடு அந்த சின்ன கிராமத்திற்குள் நுழைகிறான் கிளி ஜோசியக்காரன் முதல் தெருவில் ஒரு பிணம் விழுந்துள்ளது "தளபதி சக்திவேல்" காலமாகிவிட்டார். கெத்தாக வாழ்வதற்கு கெத்தான பெயர் அவசியம்தான். நேற்று தளபதியும் சக்திவேலும் மடிந்துவிட்டனர். கிளி ஜோசியக்காரன் யாரையும் அதிர்ஷ்டம் பார்க்க அழைக்க வில்லை. கிளி அழைக்கிறது. அவன் அதை அதட்டி அடக்குகிறான். இரண்டாவது, மூன்றாவது என அடுத்தடுத்த தெருக்களிலும் அவன் யாரையம் அழைக்கவில்லை. கிளி அழைத்தது அவன் அதட்டினான். 9 வது தெருவில் அவன் அழைக்கவில்லை அதுவும் அழைக்கவில்லை. கிளிக்கு என்னவோ புரிந்துவிட்டது. ஆனால் எதுவும் புரியவில்லை. 2.
வெயில் அள்ளிக் கொட்டியது. ஒரு மாடிவீட்டு நிழலில் நின்று பீடியைப் பற்றவைத்தான் கிளி ஜோசியக்காரன். கிளி ஜோசியம் ஒரு விளையாட்டாகி காலங்கள் ஆகிவிட்டன அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான். அவனுக்கு இதுபோல் விளையாட்டாகத்தான் ஏதாவது செய்ய வரும்.
|
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments