எப்போதும் ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிட்டு என் நாயிற்கு எறிவேன் அரை பிஸ்கட்டிற்கு முழு உடலால் நன்றி செலுத்தும் பிராணி அது இரண்டு முறைகள் அந்த நன்றியைக் கண்டு களிப்பேன் இரு முறையும் அது என்னைப் போற்றிப் பாடும் ஒவ்வொரு முறையும் என் முகத்தை அவ்வளவு ஏக்கத்தோடு பார்த்துக் குழையும் இரண்டாம் துண்டு என் இஷ்டம் இரண்டு துண்டுகளுக்கிடையே அதன் நெஞ்சம் அப்படிக் கிடந்து தவிக்கும் உச்சியில் இருக்கும் எதுவோ இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுதான் என் பிஸ்கட்டை ஆயிரம் துண்டுகள் ஆக்கி வைத்தது. |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments