யானை தன் காட்டில் அசைந்து அசைந்து செல்வதைப் போலே இந்தப் பிரதான சாலையைக் கடந்து கொண்டிருக்கிறது ஒரு தூவெண் பூனை பூனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்வது தன்னிலிருந்து தனக்கு சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் ஒருவன் நிலை தடுமாறி ப்ரேக் அடித்து காலூன்றி நிற்கிறான் பொதுவாக அது ஒதுங்கி ஒளிவது ஓடி மறைவது இன்றென்னவோ ரொம்பத்தான் பிலுக்கு " உங்கப்பன் போட்ட ரோடா?" என்றவன் கேட்கவில்லை. ஆனால் அதன் நடை அப்படித்தான் சொல்லியது. |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments