யானை தன் காட்டில் அசைந்து அசைந்து செல்வதைப் போலே இந்தப் பிரதான சாலையைக் கடந்து கொண்டிருக்கிறது ஒரு தூவெண் பூனை பூனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்வது தன்னிலிருந்து தனக்கு சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் ஒருவன் நிலை தடுமாறி ப்ரேக் அடித்து காலூன்றி நிற்கிறான் பொதுவாக அது ஒதுங்கி ஒளிவது ஓடி மறைவது இன்றென்னவோ ரொம்பத்தான் பிலுக்கு " உங்கப்பன் போட்ட ரோடா?" என்றவன் கேட்கவில்லை. ஆனால் அதன் நடை அப்படித்தான் சொல்லியது. |

Comments