ஊர்ந்து செல்லும் மோட்டர் சைக்கிளில் எதையோ விற்றுக்கொண்டு போகிறான் எவ்வளவு செவி கூர்ந்தாலும் என்ன என்பது விளங்கவில்லை என்ன விற்பது என்று தெரியாமல் எப்படி வாங்குவார்கள்? ஆரம்பத்தில் அவன் விற்கத்தான் செய்தான் ஏதோ ஒரு கணத்தில் சட்டென அவனொரு பாட்டில் ஏறி விட்டான் இதோ... பாடிக்கொண்டு போகிறான். பாட்டில் ஏறிய பிறகு அவன் எதையும் விற்பதில்லை யாரையும் அழைப்பதுமில்லை. |
“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக் கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும் நாலு முக்கில் வைத்து பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக் கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.

Comments