திடீரெனக் கண்டேன் சுவரில் மிதக்கும் ஒரு ஒளிக்குழம்பை. ஆனந்தக் குழப்பத்துள் தலைகுப்புற வீழ்ந்தேன். சேறும் சகதியும் ஊரும் புழுவும் மொய்க்கும் ஈயும் மல்லாந்து கிடக்கும் ஒரு பல்லியின் சடலமும் சேர்ந்த ஒரு சிறு குட்டையில் எங்கிருந்தோ வந்த ஒரு சூரியக் கதிர் பட்டுத் தெறிக்கிறது. சுவரிலோ சேரில்லை சகதியில்லை பல்லியின் சடலமும் இல்லை தெரிவதெல்லாம் முழு ஒளித் தளும்பல். பள்ளிப் பிராயத்தின் அறிவியல் வகுப்பில் ஒளிச்சிதறல், பிரதிபலிப்பு, எதிரொளிப்பு என்றெல்லாம் சொல்லப்பட்டனவே அவையல்ல இந்த நடுவயதில் கன்னத்தில் கைகூட்டி நெடுநேரம் இப்போது நான் கண்டு கொண்டிருப்பது |
நண்பர் செந்தில் தான் புதிதாக துவங்க இருக்கிற மின்னிதழுக்காக பொறுப்பான வேலையொன்றை தந்து செய்துதரச் சொன்னார் . அப்போது நான் பொறுப்பான வேலைகள் எதுவும் செய்யும் மனநிலையில் இல்லை . ஆனாலும் முதல் இதழ் என்பதால் செந்திலுடன் இருக்க விரும்பினேன் . ஆகவே “ பொறுப்பற்ற வேலையொன்றை “ செய்து தருவதாக ஒப்புக்கொண்டேன் . அதுவே குத்துப்பாடல்கள் பற்றிய இக்கட்ட...

Comments