பிச்சைக்காரனுக்கும் இளம் பைத்தியத்திற்கும் இடையில் இருந்தான் அந்தச் சிறுவன். அர்த்தங்கள் அவசியப்படாதவன் என்பதால் சொற்களற்ற சத்தங்களால் கூவிக் கொண்டிருந்தான். பிச்சைக்காரனோ பைத்தியமோ இப்போது அவன் காலடியில் வந்து நிற்கிறது ஒரு நாய்க்குட்டி அதுவரை தொங்கிக் கொண்டிருந்த கையைத் தூக்கி அதுவரை அழுக்கில் ஊறிய இடுப்பில் கூட்டி சாய்ந்த கோணத்தில் ஒரு நோக்கு நோக்குகிறான். பிச்சைக்காரனிலிருந்து பைத்தியத்திற்குப் போகும் வழியில் நீர் எங்கு வந்தீர் மகாராஜா! |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments