பிச்சைக்காரனுக்கும் இளம் பைத்தியத்திற்கும் இடையில் இருந்தான் அந்தச் சிறுவன். அர்த்தங்கள் அவசியப்படாதவன் என்பதால் சொற்களற்ற சத்தங்களால் கூவிக் கொண்டிருந்தான். பிச்சைக்காரனோ பைத்தியமோ இப்போது அவன் காலடியில் வந்து நிற்கிறது ஒரு நாய்க்குட்டி அதுவரை தொங்கிக் கொண்டிருந்த கையைத் தூக்கி அதுவரை அழுக்கில் ஊறிய இடுப்பில் கூட்டி சாய்ந்த கோணத்தில் ஒரு நோக்கு நோக்குகிறான். பிச்சைக்காரனிலிருந்து பைத்தியத்திற்குப் போகும் வழியில் நீர் எங்கு வந்தீர் மகாராஜா! |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments