நல்லதங்கா கழிவறைக் கதவை தண்ணீர் குழாயை ஆனால் பெண்களின் கண்ணீர் என்பது
ஒருத்தி அழத்துவங்கியவுடன் அங்கு அப்போதே “ தொப்” சத்தமே காதலரே… காய்பவரே… முறுக்கிப் பிழியப்பட்டு யாரும் எடுத்து எந்தத் தொண்டையிலும் ம்… இந்தச் சலுகை ஆகட்டும்.. சீக்கிரம்.. சீக்கிரம்… பணி செய்து கிடத்தல் துப்புரவுப் பணியாளர்கள் ஒருவர் ஒருவர் அணைத்துக் கொள்வதற்குப் பதிலாக இளம் பெண்கள் இதை ஓய்வென்று நம்பவில்லை நான் இப்போது எங்கென்றுதான் |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments