Skip to main content

இசை கவிதைகள் - அகழ்





ல்லதங்கா



கழிவறைக் கதவை
இழுத்துச் சாத்திக் கொள்வது
வசதியானது


தண்ணீர் குழாயை
திறந்து விடுவது
மேலும்
வசதியானது


ஆனால்
வெட்ட வெளியின் மத்தியில்
அமர்ந்திருக்கிறாள் ஒருத்தி


பெண்களின் கண்ணீர் என்பது
ஒரு தனியூத்து


இங்கு நான் காண்பது
அதன் சில துளிகள்


ஒருத்தி அழத்துவங்கியவுடன்
அபலை ஆகிவிடுகிறாள்


அங்கு அப்போதே
முளைத்து விடுகிறது ஒரு கிணறு


“ தொப்” சத்தமே
அப்பாலே போ!


காதலரே… காய்பவரே…


முறுக்கிப் பிழியப்பட்டு
பலகாரக் கடையில் அடுக்கப்பட்டுள்ள
ஜிலேபித் துண்டு போல் ஆகிவிட்டேன் திடீரென்று


யாரும் எடுத்து
விண்டு விழுங்கலாம்


எந்தத் தொண்டையிலும்
நழுவி விழுவேன்
குளு குளுவென


ம்…
சீக்கிரம்…


இந்தச் சலுகை
எத்தனை மணித்துளிகளுக்கென்று
எனக்கே தெரியாது


ஆகட்டும்..


சீக்கிரம்..

சீக்கிரம்…


ணி செய்து கிடத்தல்


துப்புரவுப் பணியாளர்கள்
பணி முடித்து
ஓய்வில் இருக்கிறார்கள்


ஒருவர்
கடைவாய் ஒழுக
வெற்றிலை
மென்று கொண்டிருக்கிறார்


ஒருவர்
போனில்
சத்தமாகச் சிரித்த படியிருக்கிறார்


அணைத்துக் கொள்வதற்குப் பதிலாக
ஒருவரையொருவர்
துரத்தி விளையாடுகிறார்கள்

இளம் பெண்கள்


இதை ஓய்வென்று நம்பவில்லை நான்


இப்போது
உலகின் ஏதோ ஒரு மூலை
துப்புரவாகிக் கொண்டிருக்கிறது


எங்கென்றுதான்
எனக்குச் சொல்லத் தெரியவில்லை.



Comments

வண்ணைசிவா said…
அருமையான கவிதைகள்.

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...