வரவர எனக்குத் திகில் படங்கள் மிகவும் பிடிக்கின்றன. ரிமோட்டை அழுத்தி அழுத்தி ஒன்று விடாமல் தேடுகிறேன் பேய்கள் என்னைக் கேட்டுக் கொண்டுதான் திரையரங்கம் வருகின்றன. காய்ந்த சருகுகள் எவ்வளவு பிரமாதமாக நடிக்கின்றன யாருமற்ற திசை நோக்கி விட்டு விட்டுக் குலைக்கும் கருப்பு நாய் கும்மிருட்டை கிழித்துக் கொண்டு அடிக்கும் சின்ன வெளிச்சம் சூப்பர்….. திகிலின் கதவைத் திறந்து கொண்டு திகிலுக்குள் வருகிறேன் காய்ந்த சருகோ கருப்பு நாயோ இல்லாத உலகின் திகில் அஞ்சி அஞ்சி குலை நடுங்கும் திகில் நடுநடுங்கித் தலைகுனியும் திகில் |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments