பெரிய மருத்துவமனையின் சின்ன அறைக்குள் ஒரே படுக்கையில் உடலில் குழல்கள் செருகப்பட்டு வாரக் கணக்கில் கிடந்தாள் அம்மா. கொஞ்சம் தேறியதும் வராண்டாவில் மெல்ல மெல்ல நடந்தாள் குறுக்கும் மறுக்குமாக நடந்து கொண்டிருந்தவள் பால்கனியை கை காட்டினாள் பூரண வெளி முன் நின்று "அப்பா... மொத மொதல்ல உன்னப் பார்த்த மாதிரி இருக்கு..." என்றாள் இருவரில் நான்தான் கவி விருதுகள் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் கவி |
Comments