Skip to main content

டி.வி யில் நடக்கும் போர்




டி.வி யில் நடக்கும் போர் என்பது

காணக் கிடைக்காத வாணவேடிக்கை

கண் கொள்ளாப் பிரகாஷம்


திரைகள் எரியும்

அதிரடி சண்டைக் காட்சிகள்

நிஜத்தில் நிகழ்வது

புத்தம் புது பரவசம்


டொம்…

டொம்…

எனும் இனிய சங்கீதங்கள்


ஐ.பி. எல் ஆட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.


அதனாலென்ன ஜாலியானவர்களே!



நாம்

சேனலை மாற்றுவோம்.


அங்கு 

ஐ.பி. எல்-  லைக் காட்டிலும்  ஜாலி

ஒரு குழந்தை துடிதுடித்துச் சாகிற ஜாலி


டி.வி யில் நடக்கும் போரில் திளைக்க

கோழி இறைச்சியை துணை கொள்ளும்

ரசிகப்  பெருமக்காள்..!

எதற்கும் ஒரு முறை

பரிசோதித்துக் கொள்ளுங்கள்...

“கோழி இறைச்சி தானே அது?”


Comments

Thendral said…
எச்சரிக்கை

Popular posts from this blog

நடக்கக் கூடாதவை நடப்பதில்லை

பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின்  சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு  வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும்  உண்டு    சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.