Skip to main content

Posts

பாடகனற்ற பாடகன்

                        பாடகனற்ற   பாடகனுக்கு       " பாடகன் " என்கிற இரும்புக் குண்டால்        மூச்சிரைப்பதில்லை.        சபையில்லை  ;  செவிகளுமில்லை.        பாடுதலே  கரகோஷம் என்பதால்        எதற்கும் ஏங்கி அழிய வேண்டியதில்லை.        தன்னைத் தானே அணைத்துக் கொள்ளும் ஜாலத்தில் தேர்ந்த பிறகு        அச்சமில்லை ; அழுகையுமில்லை.         பாடகனற்ற பாடகனின் பாத்ரூமில்        ஒரு நெளிந்து வளைந்த சில்வர் பக்கெட் ...        ஆயினும், அதனுள்ளே செழுமலைச் சுனைநீர்.      அவன்  ஹெல்மெட்டுக்குள் தால் அன்றி வேறு ஒன்றுமேயில்லை.

மகத்தான ஈ

நீள்விசும்பினில்   உயரப் பறந்தும் மா நிலத்திடை  ஆழ  உழுதும் சஞ்சய் பாடுகிறார் சஞ்சய் பாடுகையில் மைக்கும்  ஒரு இனிப்புப் பண்டம்தான் அதன் வடவடப்பில் மொய்த்துக் கொண்டிருக்கிறது ஒரு ஈ அவர் அவ்வளவு நெருங்கி வருகையிலும் அது ஆடாது அசையாது அமர்ந்திருக்கிறது. மத்தளங்களின் கொட்டும், நரம்புகளின் நாதமும் விரட்டுவதற்குப்  பதிலே அதை மேலும் மேலும் இருக்கச் செய்கிறது. அதிகாலை இளங்காற்றின் ஏகாந்தியென மின்சார ஒயர்களின் மேல் ஊர்ந்து கொண்டிருக்கிறது. மகத்தான விஷயங்களின் மீது ஈயாயிரு மடநெஞ்சே!                 (நன்றி : தடம் - அக்டோபர்-18)

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நக...

மதுரா

                             ' உங்களுக்கு 4 கோடி கடன் வழங்க உத்தேசித்துள்ளோம்...   எப்போது பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் ?  '   என்று கேட்டது ஓர் அழைப்பு  ' இல்லை... வேண்டாம்... ' என்றேன். சில நாட்கள் கழித்து திரும்பவும் அழைப்பு ... 2 கோடி தரப் போகிறோம் ...  ' வேண்டாம் 'என்றேன். நேற்று மீண்டும் அழைத்து 50 லட்சம் அளிப்பதாகச் சொல்லியது அண்டசராசரங்களையும்  வழங்க வல்ல குரலது மறுத்த போதும் அளித்துக் கொண்டுதான் இருந்தாள் அவள் 6 கோடியே 50 இலட்சத்தை  மூட்டை தூக்கியேனும் அடைத்து விட வேண்டும்.         நன்றி : உயிர்மை ஆகஸ்ட் - 18

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெரியும்

                           அது அழுக்கும் காற்றோட்டமற்றதுமான வகுப்பறை.அதன் பின்னால் மனோகரமான பள்ளத்தாக்குகள் இல்லை. அதை ஒட்டி ஓடைகள் சலசலப்பதில்லை. ஆனாலும் அதனுள்ளிருந்து ஒரு கிறங்கடிக்கும் நறுமணம் கசிந்து வரும். அது இதயத்தின் தசைநார்களை இன்பத்தின் வலியால் துடிதுடிக்கச் செய்யும்.வினோதம் என்னவெனில், இப்படி ஒரு அறை இருப்பதே முக்கால்வாசி மனித குலத்திற்குத் தெரியாது. சிலருக்கு தெரிந்திருந்த போதிலும் அவர்களது நாசிகளுக்கும்    அந்த நறுமணத்திற்குமிடையே ஊடுருவமுடியாத தடை இருந்தது.      என்ன வண்ணம்   ? என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாத, பொத்தானுக்குப் பதிலாக பின்னூசி குத்தப்பட்ட   சட்டையும், பொத்தல்களால் “ தபால் பெட்டி “ என்று கேலி செய்யப்பட்ட   டவுசரும் அணிந்திருந்த எங்களால் அந்த நறுமணத்தை உணர முடிந்தது. நாங்கள் பரவசம் கொப்பளிக்க வகுப்பறைக்குள் நுழைய முற்பட்டோம். அப்போது கருணையற்ற கண்களை தடித்த கண்ணாடியால் மூடியிருந்த , கடுத்த முகமும் , கொண்டைப் பிரம்பும் கொண்ட ஒ...

சொப்ன சஞ்சாரம்

                                                                            இணையம் கணினிக்குள் புகுந்து உலகை கோலோச்சியதற்கு முந்தைய பருவம் ... அவன் இளமை “ டும்” என்ற சத்தத்துடன் வெடித்துத் திறந்து சில வருடங்கள் ஆகியிருந்தன. காமத்தின் கடுவளிக்கு எதிர்நிற்க மாட்டாது தள்ளாடிக் கொண்டிருந்தான். அவன் தினவிற்கு கையளவிளல்ல, கவளங்களில் வேண்டியிருந்தது. ஆனாலும் அவன் பட்டினியால் வாடிக் கொண்டிருந்தான். அவனுக்குச் சொந்த வீடில்லை. நிரந்தர வேலையில்லை. எந்த வங்கியிலும் கணக்கில்லை. ஆனால் அவன் உடல் இதை எதையும் பொருட்படுத்தவில்லை.       எதிர்காலம் குறித்த பயங்கரமான கற்பனைகளிலிருந்து அவனைத் தடுத்தாட்கொண்டனர் சிலர். அவர்கள் முந்தானையைச் சரிய விடும் வேளையில் அவனுக்குக் கவலைகள் என்று இந்த உலகத்தில் ஒன்றுமே இருக்கவில்லை.ஏனெனில் இப்படி ஒரு உலகமே அக்கணங்களில் இருக்கவில்லை. பரவசத்தின் புதிர்நிரம்பிய பழ...