அவள் முதன்முதலாக ஒரு கொலையை கண்ணெதிரே கண்டாள் அலறித் துடித்தவன் அவள் காதலனாக இருந்தான் மூவர் கை கால்களை ஆட்ட விடாமல் பிடித்துக் கொள்ள கொஞ்சம் கெட்டியான ஆப்பிளை அறுப்பது போல ஒருவன் குரல்வளையை நறுக்கினான். அவள் அவர்களை கொலையாளிகள் அல்ல என்றும் முதலில் அவன் தன் காதலனே அல்ல என்றும் நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன பொழுதில் பார்வையாளர் வரிசையில்தான் அமர்ந்திருந்தது காதல். அது இதுபோல் எவ்வளவோ பார்த்துவிட்டது. |
Comments