Skip to main content

ரஜினி ரசிகையின் காதலன்



ன் காதலி ஒரு ரஜினி ரசிகை 

என்பதை

திடீரென

அறிய நேர்ந்தது.


சுப்ரமணிய பாரதியின்

வரி ஒன்று

தலை மேல் வந்து விழுந்தது.


சிகரெட்டை வானத்திற்கு வீசி

துல்லியமாக

அதைத் துப்பாக்கி புல்லட்டால் 

பற்ற வைத்து

மிகச் சரியாக

வாயில் விழ வைக்கும் 

காட்சி ஒன்று 

ஓடி வந்து முன்னால் நின்றது.

ஐந்து முறை 

" உஸ்" சொல்லியும்

 அசையாமல் அது  அங்கேயே 

நிற்கிறது.


ஆனால்

ஆறு மாதங்கள் முன்பு 

ஒரு திரை விமர்சகரிடம் பேசிக் கொண்டிருந்த போது 

"கமலஹாசனோ

மோகன்லாலோ அல்ல

ரஜினிகாந்தான் சிறந்த நடிகர்.

அதிரடிக்காக சொல்ல வில்லை. 

ஆராய்ச்சியின் முடிவுதான்.." 

என்று சொன்னார்.

அவசரப்பட்டு 

அவர் எண்ணை வேறு அழித்துவிட்டேன்.

திரும்ப அழைத்துப் பேச வேண்டும்.

" மாயா லோகம்" இதழில்

 மாதாமாதம் கட்டுரை எழுதும் ஒருவர்

பொய் சொல்ல வாய்ப்பில்லையல்லவா?


தவிர

ஓடுகிற ஜீப்பை

ஒற்றைக் காலால் கட்டி நிறுத்துவது

யோக முறைகளில் ஒன்றால்

சாத்தியம்தான் என்பதை

நான் வாசிக்க வந்த புதிதில்

வாசித்துள்ளேன்.


'எப்படி' என்பதை

' எப்டி' என்று உச்சரிக்கையில்

 அங்கு ஒரு புது அழகு

பூத்து நிற்பதை

நானும் சில முறை உணர்ந்துள்ளேன்.


வலது கையால்

இடது கண்ணை மூடிவிட்டு 

மீதிக் கண்ணால் 

கொஞ்ச நேரம் ஆழந்து நோக்கினால்

அந்தச் சின்னக் கண்ணில்

ஒரு காந்தத் துண்டு 

ஆடுவதை

கட்டாயம் நீங்கள் காண முடியும்.


அனைவரும்

ஆம் என்போர் தானே

நண்பர்களே!


Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம