Skip to main content

ரஜினி ரசிகையின் காதலன்



ன் காதலி ஒரு ரஜினி ரசிகை 

என்பதை

திடீரென

அறிய நேர்ந்தது.


சுப்ரமணிய பாரதியின்

வரி ஒன்று

தலை மேல் வந்து விழுந்தது.


சிகரெட்டை வானத்திற்கு வீசி

துல்லியமாக

அதைத் துப்பாக்கி புல்லட்டால் 

பற்ற வைத்து

மிகச் சரியாக

வாயில் விழ வைக்கும் 

காட்சி ஒன்று 

ஓடி வந்து முன்னால் நின்றது.

ஐந்து முறை 

" உஸ்" சொல்லியும்

 அசையாமல் அது  அங்கேயே 

நிற்கிறது.


ஆனால்

ஆறு மாதங்கள் முன்பு 

ஒரு திரை விமர்சகரிடம் பேசிக் கொண்டிருந்த போது 

"கமலஹாசனோ

மோகன்லாலோ அல்ல

ரஜினிகாந்தான் சிறந்த நடிகர்.

அதிரடிக்காக சொல்ல வில்லை. 

ஆராய்ச்சியின் முடிவுதான்.." 

என்று சொன்னார்.

அவசரப்பட்டு 

அவர் எண்ணை வேறு அழித்துவிட்டேன்.

திரும்ப அழைத்துப் பேச வேண்டும்.

" மாயா லோகம்" இதழில்

 மாதாமாதம் கட்டுரை எழுதும் ஒருவர்

பொய் சொல்ல வாய்ப்பில்லையல்லவா?


தவிர

ஓடுகிற ஜீப்பை

ஒற்றைக் காலால் கட்டி நிறுத்துவது

யோக முறைகளில் ஒன்றால்

சாத்தியம்தான் என்பதை

நான் வாசிக்க வந்த புதிதில்

வாசித்துள்ளேன்.


'எப்படி' என்பதை

' எப்டி' என்று உச்சரிக்கையில்

 அங்கு ஒரு புது அழகு

பூத்து நிற்பதை

நானும் சில முறை உணர்ந்துள்ளேன்.


வலது கையால்

இடது கண்ணை மூடிவிட்டு 

மீதிக் கண்ணால் 

கொஞ்ச நேரம் ஆழந்து நோக்கினால்

அந்தச் சின்னக் கண்ணில்

ஒரு காந்தத் துண்டு 

ஆடுவதை

கட்டாயம் நீங்கள் காண முடியும்.


அனைவரும்

ஆம் என்போர் தானே

நண்பர்களே!


Comments

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...