ஆருயிர் நண்பனொருவன் விபத்தில் சிக்கி உடல் முழுக்க குழல்கள் செருகப்பட்டு அவசர சிசிக்சைப் பிரிவில் கிடந்தான் ஒரு மாத காலம். வார்டுக்கு மாறி ஒரு மாதம் கிடந்தான் வீட்டிற்கு மாறி ஒரு மாதம் கிடந்தான் காவிய ருசியின் கிறுகிறுப்போடு என் கவிதை ஏட்டை மெல்லப் புரட்டினான் இன்று. அவனுக்குத் தெரியும் நான் சொற்களால் கண்ணீர் வடிப்பவன் சொற்களால் மண்டியிடுபவன் வளையாத தெய்வங்களையெல்லாம் சொற்களால் வளைப்பவன் அவன் போனதற்கும் வந்ததற்குமிடையே காலியாக இருந்தது ஏடு அவசர சிகிச்சைப் பிரிவின் கதவுகளை ஆவேசமாக அடித்துத் திறந்து எல்லாக் குழல்களையும் திரும்ப செருகிக் கொண்டு அதே படுக்கையில் மல்லாந்து விட்டான் மறுபடியும்
நன்றி; ஆனந்த விகடன் தீபாவளி மலர் |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments