Skip to main content

அவர்- அவன்

 




றுவை சிகிச்சை முடிந்து

ஆயுள் முழுதும் உபயோகிக்க வேண்டுமென

பரிந்துரைக்கப்பட்ட

கண் மருந்தை வாங்கி வருவதற்காக

அவர் கிளம்பிக் கொண்டிருக்கிறார்


"துணைக்கு வரவா" ?

என்று கேட்ட மனைவியின் குரலை

முறைத்து விட்டு நடக்கிறார்


பழமை வாய்ந்த 

அந்த மருந்துக் கடையில்

அரசுப் பணியில் சேரும் முன்

நான்கு வருடங்கள்

அவர் சிப்பந்தியாக இருந்துள்ளார்.


அவர் கடையை அடைகையில்

அந்தப் பையன்தான் 

முன்னே நின்று கொண்டிருந்தான்.


அவன்

மேலும் கீழும் போகிறான்.


அங்கும் இங்கும் தாவுகிறான்.


கடை மூலையில் 

ஸ்டைலாக சாய்ந்து கொண்டு 

மருந்துகளை விட்டுவிட்டு

வேறொன்றைச் சிந்திக்கிறான்.


வேறு ஸ்டைலான இடத்திற்குப் போய்விட்டு

கடைக்குத் திரும்புகிறான்.


பில் வரிசையில்

தனக்கு முன் நிற்கும்

பெண் ஊழியரிடம் 

அவள் மட்டும் கேட்கும் படி

என்னவோ கிசு கிசுக்கிறான்.


அவளோ அவன்

கிசுகிசுக்கும் முன்னரே

நாணத்தின் பிரகாசத்தோடு 

நின்று கொண்டிருந்தாள்


மருந்தையும் , மீதிப் பணத்தையும்

முன் வைத்துவிட்டு

திரும்ப எத்தனிக்கையில்

அவன் சட்டையைப் பிடித்து

அதை உருவிவிடும் ஆவேசத்தோடு

அவர் ஒரு இழு இழுக்கிறார்.


Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம